Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 11, 2020 10:30

தூத்துக்குடி: உத்திரப்பிரதேச சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்காக உ.பி அரசு பதவி விலக கோரி தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியில் உத்திரப்பிரதேச சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச்செயலாளர் மகாராஜன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. உ.பி அரசு பதவி விலக கோரியும், மோடி அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி மாவட்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் அமல்ராஜ், மத்திய மாவட்ட துணை செயலாளர் கணேசன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறுத்தை குமார், செய்தி தொடர்பாளர் செல்வகுமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஹோட்மேன், 2வது வார்டு வட்ட செயலாளர் இசக்கி செல்வம், 3வது வார்டு வட்ட செயலாளர் விக்னேஷ், 4வது வார்டு வட்ட செயலாளர் அந்தோனி வளவன் 6வது வார்டு வட்ட செயலாளர் இசக்கி முத்து 10 வது வார்டு வட்ட செயலாளர் அருண்குமார், 18வது வார்டு வட்ட செயலாளர் ராஜசேகர்  உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்